புதன், 22 டிசம்பர், 2010

திருப்பலி செபங்கள்

எல்லாம் வல்ல இறைவனிடமும்

எல்லாம் வல்ல இறைவனிடமும்
சகோதரர் சகோதரிகளே உங்களிடமும்
நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும்
செயலாலும் கடமையில் தவறியதாலும்
பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே!
ஆகையால், எப்பொழுதும் கன்னியான
பரிசுத்த மரியாளையும்
வானதூதர் புனிதர் அனைவரையும்
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் தேவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

உன்னதங்களிலே கடவுளுக்கு

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக!

பூவுலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக!
உம்மைப் புகழ்கின்றோம், உம்மை வாழ்த்துகின்றோம்,
உம்மை ஆராதிக்கின்றோம், உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய சர்வேசுரா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா!
ஏக சுதனாய்ச் செனித்த ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே!
ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.

பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர்;
நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்; பரிசுத்த ஆவியோடு
பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. 
ஆமென்.

வானமும் பூமியும்

ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்.
வானமும் பூமியும் காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.
சர்வேசுரனின் ஏக சுதனாய் ஜெனித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே
பிதாவினின்று ஜெனித்தார்;
கடவுளினின்று கடவுளாக ஒளியினின்று ஒளியாக
மெய்யங் கடவுளின்று மெய்யங் கடவுளாக ஜெனித்தவர்;
இவர் ஜெனித்தவர் உண்டாக்கப்பட்டவர் அல்லர்;
பிதாவோடு ஒரே பொருளானவர்;
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன;
மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
வானகமிருந்து இறங்கினார்;
பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார்.
மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையுண்டு
பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார்.
வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
வானகத்திற்கு எழுந்தருளி
பிதாவின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார்.
ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க
மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.
அவரது அரசுக்கு முடிவு இராது.
பிதாவினின்றும் சுதனினின்றும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான
பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக
ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார்.
தீர்க்கத் தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே.
ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க
திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும்
ஏற்றுக்கொள்கின்றேன்.
மரித்தோர் உத்தானத்தையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும்
எதிர்பார்க்கின்றேன். - ஆமென்.

காணிக்கைப் பாடலுக்குப் பின்

குரு

சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்.

இறை மக்கள்

ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும் மகிமைக்காகவும் நமது நன்மைக்காகவும் தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையினின்று இப்பலியை ஏற்றுக் கொள்வாராக.

தூயவர்

தூயவர் தூயவர் தூயவர்
மூவுலகிறைவனாம் ஆண்டவர்.
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே;
உன்னதங்களிலே ஓசான்னா!
விசுவாசத்தின் மறைபொருள்


இது விசுவாசத்தின் மறைபொருள்.

ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்.

கிறிஸ்து கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும்  செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

ஆமென்.

உலகின் பாவம் போக்கும்

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

ஆண்டவரே தேவரீர் என்னிடம் எழுந்தருள

ஆண்டவரே தேவரீர் என்னிடம் எழுந்தருள நான் தகுதியற்றவன்(ள்).
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக