என் ஆண்டவளே, என் தாயாரே, இதோ என்னை முழுவதும் உமக்கு பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். உமதுபேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கத்தக்கதாக இன்று எனது கண், காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுவதும் உமக்கு பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என்நல்ல தாயாரே, நான் உமக்குச் சொந்தமாயிருக்கிறபடியால் என்னை உம்முடைய உடைமையாகவும், சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றியருளும். ஆமென்.
மரியாயே என் நல்ல தாயாரே, இந்த நாளிலே, இந்த இரவிலே என்னைச் சடுதி மரணத்திலும், சாவான பாவத்திலும் நின்று காத்துக்கொள்ளும்.(மூன்று முறை சொல்லவும்)
அடைக்கலச் செபம்.
சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே, இதோ உம்முடைய அடைக்கலமாய் ஓடிவந்தோம். நாங்கள் எங்கள் அவசரங்களிலே வேண்டிக்கொள்வதற்கு தாயே நீர் பாராமுகமாயிராதேயும், ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்ச மகிமை உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துகளிலும் நின்று தற்காத்துக்கொள்ளும். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக