புதன், 22 டிசம்பர், 2010

தேவதாயின் அடைக்கலச்செபம்.

தேவதாயின் அடைக்கலச்செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே, இதோ அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகாரங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மாற் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகிற் கேள்விப்பட்டதில்லை என்றதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே தயவுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டிவருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குத் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமற் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும், ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக