புதன், 22 டிசம்பர், 2010

மூவேளை செபம்

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்.
தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள்.

           - அருள்நிறை .....

இதோ ஆண்டவரின் அடிமை.
உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்.

           - அருள்நிறை .....

வாக்கு மனிதனானார்.
நம்மிடையே குடிகொண்டார்.

           - அருள்நிறை .....

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி,
இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:

இறைவா உம் திருமகன் மனிதனானதை உம்முடைய வானதூதர் வழியாக அறிந்து இருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக